மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி முதியவர் அடித்துக் கொலை! குற்றவாளிகள் கைது
இந்திய மாநிலம் பீகாரில் 56 வயது முதியவர் மாட்டிறைச்சிக் கொன்று சென்றதாக, சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் அடித்து சித்ரவதை
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில், முதியவரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஹசன்பூர் கிராமத்தில் வசிக்கும் 56 வயதான நசீம் குரேஷி மற்றும் அவரது மருமகன் ஃபிரோஸ் அகமது குரேஷி ஆகியோர், வியாபார ரீதியாகச் சிலரைச் சந்திக்க பாட்னா வழியாக சென்றுள்ளனர்.
@siaset
சரியாக பாட்னாவிலிருந்து வடமேற்கே 110 கிமீ தொலைவில் உள்ள ஜோகியா கிராமத்தில் ஒரு கும்பல் அவர்களை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
முதியவர் உயிரிழப்பு
இருவரும் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்லுவதாக கூறி அவர்களைத் தாக்க முயன்றுள்ளனர். அப்போது ஃபிரோஸ் அகமது குரேஷி தப்பியோட முயன்றிருக்கிறார்.
முதியவரான நசீம் குரேஷியை அந்த கும்பல் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அந்த கும்பல் தாங்களாகவே அந்த முதியவரை ரசூல்பூர் கிராமத்தில் உள்ள காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
@ndtv
உண்மையாகவே அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு சென்றார்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை அடித்த சர்பஞ்ச் சுஷில் சிங், ரவி சா மற்றும் உஜ்வல் சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பெரியவரோடு வந்த ஃபிரோஸ் அகமது குரேஷி அளித்த புகாரின் பேரில் மேலும் இருவரை காவல்துறை தேடி வருகிறது.