வீடுகளில் ஆலிவ் எண்ணெய் போத்தல்கள்... பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
பிரித்தானிய சமையலறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய் என்பது விலைவாசி உயர்வுக்கு முதன்மை காரணிகளில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
விலை உயர்வு பட்டியல்
சமீப காலமாக உணவு பண்டங்களின் விலைகள் அதிகரித்திருப்பது பொதுவாக பல்பொருள் அங்காடிகளில் செல்லும் மக்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். மட்டுமின்றி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலை அல்ல தற்போது ஒவ்வொரு பொருளுக்கும் நாம் செலுத்தி வருவது.
இந்த நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள உணவு பண்டங்களின் விலை உயர்வு பட்டியல் திகைக்க வைத்துள்ளது. அதில், ஆலிவ் எண்ணெய் விலை மட்டும் 39.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சர்க்கரை விலை 7 சதவிகிதமும் காய்கறிகளின் விலை 2.5 சதவிகிதமும் முட்டை விலை 2.5 சதவிகிதமும் பழங்கள் விலை 2.6 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், கோகோ மற்றும் தூள் சாக்லேட் விலை 19.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஆலிவ் எண்ணெய் விலை
அதே சமயம் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஜூஸ் வகைகள் 1.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டீ பேக்குகளின் விலையும் தப்பவில்லை, 9.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பீர் 5.6 சதவிகிதமும், ஒயின் 6.2 சதவிகிதமும், ஸ்பிரிட் 5.7 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
உணவு பண்டங்கள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களுக்கான விலை அதிகரித்து வந்தாலும், அதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே ஆலிவ் எண்ணெய் விலை தொடர்பில் பிரித்தானிய மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், அதன் விலை 39.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |