இந்தியாவில் Omicron தொற்றால் ஏற்பட்ட முதல் மரணம்! 52 வயதான நபர் உயிரிழந்ததால் அதிர்ச்சி
இந்தியாவில் 52 வயதான ஒருவர் Omicron நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் Omicron எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை 23 மாநிலங்களில் Omicron மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 962ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் Omicron மரணம் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவின் பிம்ப்ரி பகுதியில் 52 வயதான நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 27% அதிகரித்ததால், கோவிட் -19 வழக்குகளின் தினசரி எண்ணிக்கையில் நாடு ஆபத்தான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இதனிடையே அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் Omicron மரணங்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.