இந்தியாவில் நுழைந்தது ஒமைக்ரான்!
இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் கர்நாடாக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
66 மற்றும் 46 வயதான இரு ஆண்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பீதியடைய தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வு முற்றிலும் அவசியம் என என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய வந்தவுடன் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவ மேலாண்மை நெறிமுறையின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சோதனையில் தொற்று இல்லை என உறுதியானால், அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய சுகாதார அமைச்கம் தெரிவித்துள்ளது.