பிரித்தானியாவில் கொரோனா நடவடிக்கைகள் எப்போது குறையும்? சாஜித் ஜாவித் முக்கிய தகவல்
ஓமிக்ரான் பரவலைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சாஜித் ஜாவித் கூறியதாவது, பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால், ஓமிக்ரான் பரவலைக் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அடுத்த வாரம் கணிசமாகக் குறைக்கப்படும் என நான் நம்புகிறேன்.
தேவையில்லாத பட்சத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நாள் கூட நீடிக்கக் கூடாது என்று நான் எப்போதும் கூறியிருக்கிறேன்.
ஐரோப்பாவில் அதிகபடியாக பூஸ்டர் டோஸ் செலுத்திய நாடாக பிரித்தானியா இருக்கிறது மற்றும் ஐரோப்பாவில் மிக அதிகமான கொரோனா தடுப்பு மருந்துகளை பிரித்தானியா கொண்டுள்ளது.
இந்த மருந்துப் பாதுகாப்புகள், பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே உச்சத்தை அடைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, அடுத்த வாரம் நடவடிக்கைகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.