முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில்
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா போன்ற பல தொழில் அதிபர்களின் பெரும் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது.
எதிர்பாராத திருப்பம்
ஒரு காலத்தில் அவர்கள் அனைவரையும் விட பெரும் கோடீஸ்வரராக வலம் வந்த ஒருவர் தற்போது ஆதரவின்றி வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரான விஜய்பட் சிங்கானியா ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் மட்டுமின்றி செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார்.
ஆனால் அவரது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த, ஒரு காலத்தில் அவர் கட்டுப்படுத்திய சொத்துக்கள் எல்லாம் அவருக்கு சொந்தமில்லாமல் போனது. புகழ்பெற்ற சிங்கானியா குடும்பத்தில் பிறந்த விஜய்பட் 1980 முதல் 2000 வரை ரேமண்ட் குழுமத்தை வழிநடத்தினார்.
அவரது தலைமையின் கீழ், நிறுவனம் ஜவுளி மற்றும் பேஷன் துறையில் உலகளாவிய சக்தியாக மாறியது. ஆனால் அவரது பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை, குறிப்பாக அவரது சொந்த குடும்பத்தில் இருந்தே நெருக்கடி கிளம்பியது.
வெளியான தகவலின் அடிப்படையில், சிங்கானியாவின் மாமா மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் இருந்தே மோதல்களை எதிர்கொண்டார், அவரது உறவினர்கள் ஒவ்வொருவரும் ரேமண்ட் குழுமத்தக் கைப்பற்றத் துடித்தனர்.
குடும்பத்தை விட்டு வெளியேற்றம்
அவர் தனது இரு மகன்களான மதுபதி மற்றும் கௌதம் சிங்கானியா ஆகியோருக்கு தனது நிறுவனத்தைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தபோது மிகவும் கடுமையான தகராறு ஏற்பட்டது.
இதனிடையே மதுபதி சிங்கப்பூருக்குச் சென்றதை அடுத்து, விஜய்பட் 2015 இல் ரேமண்டில் 37 சதவிகித பங்குகளை தனது இளைய மகன் கௌதமிடம் ஒப்படைத்தார். ஆனால் சொத்துக்கள் கைக்கு வந்ததும் அவர்களது உறவு விரைவில் மோசமடைந்தது,
இதனால் விஜய்பட் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் பொருளாதார ரீதியாக போராடினார். 2006 ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 1994 ல் இந்திய விமானப் படையால் கெளரவ ஏர் கமடோராகக் கௌரவிக்கப்பட்டார்.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி, ரேமண்டின் நிகர மதிப்பு ரூ 4,617 கோடி என்றே தெரிய வந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ 1638 கோடி என கூறப்படுகிறது. இருப்பினும், விஜய்பட் சிங்கானியா தற்போதும் மும்பையில் ஒரு வாடகை குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |