பிரித்தானியாவில் மோசமடையும் நிலைமை! தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
இங்கிலாந்தில் 75 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36,389 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேற்று ஒரே நாளில் 64 இறப்புகள் பதிவாகியுள்ளன - இது முந்தைய வாரத்திலிருந்து 45% அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றன. 75 பேரில் ஒருவருக்கு இப்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று அதிகரிப்பு விகிதம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.
அதேபோல், ஸ்காட்லாந்தில் 80 பேரில் ஒருவருக்கும், வடக்கு அயர்லாந்தில் 170 பேரில் ஒருவருக்கும் மற்றும் வேல்ஸில் 210 பேரில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நேற்று 43,000 பேர் முதல் கோவிட் தடுப்பூசியும், 174,742-க்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றனர்.