கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய் கடி தடுப்பூசி! அதிர்ச்சியில் உறைந்த நபர்.. பின்னர் நடந்தது என்ன?
இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்த பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி மட்டுமில்லாமல் வெவ்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளை போடப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது அவர் நாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வரிசையில் நின்றுள்ளார். அவருக்கு ஊசி போட்ட செவிலியரும் எதுவும் கேட்காமல் ஊசியை செலுத்தியுள்ளார்.
ஊசி போட்ட பிறகே ரேபிஸ் ஊசி என்று செவிலியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படியே அதிர்ச்சியில் உறைந்த அவர் மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மருத்துவரும் செவிலியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரேபிஸ் ஊசி போட்டதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை நலமாக இருப்பதாக மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.