சீனாவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடுமை! சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது..
சீனாவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிகாா் மாநிலத்தில் உள்ள கயை மாவட்டத்தைச் சோந்தவா் அமன் நாக்சென்(20). இவர் சீனாவில் தியான்ராஜ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது அறையில் கடந்த 29ஆம் திகதி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
கொரோனா காலம் தொடங்கிய பொழுது சீனாவில் வசித்த 23,000 இந்தியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். ஆனால் ஒரு சிலர் சீனாவிலே தங்கி விட்டனர்.
இதில் ஒருவர் தான் அமன் நாக்சென். இவர் உயிரிழந்த காரணத்தை குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவரை சீன பொலிஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குறித்து பற்றி எந்த தகவலும் பொலிசார் வெளியிடவில்லை