குற்றம் சாட்டப்படாவிட்டாலும் சிறையிலடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர்: கனடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயங்கர அனுபவம்...

Asylum Seeker Canada
By Balamanuvelan Sep 29, 2022 08:40 AM GMT
Report

கனேடிய மாகாணங்கள் பலவற்றில், குற்றம் சாட்டப்படாத நிலைமையிலும், புலம்பெயர்ந்தோர், மாகாண சிறைகளில் அடைக்கப்படும் ஒரு நிலை உள்ளது.

கனடாவில் புலம்பெயர்ந்தோரை காவலில் அடைக்கும் நடைமுறையை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிறார்கள் தொண்டு நிறுவனத்தினர்.  

கனேடிய மாகாணங்கள் பலவற்றில் புலம்பெயர்ந்தோர் மாகாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் குற்றம் சாட்டப்படாத நிலையிலும்கூட!

கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தங்களின் கீழ், இப்படி பல கனேடிய மாகாணங்கள் புலம்பெயர்ந்தோரை சிறையிலடைக்கின்றன, இது சர்வதேச விதியை மீறும் ஒரு செயலாகும்.

புலம்பெயர்ந்தோர் ஒருவர், மொன்றியலிலுள்ள மாகாண சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் பலமுறை தன்னை நிர்வாணமாக்கி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்படாவிட்டாலும் சிறையிலடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர்: கனடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயங்கர அனுபவம்... | One Victim S Horrific Experience In Canada

Radio-Canada

இத்தனைக்கும் வெளிநாட்டவரான அந்த நபர் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. அவர் கடந்த ஆண்டு, சுமார் ஆறு மாதங்கள் சிறையில் செலவிட்டுள்ளார்.

2015 முதல் 2020 வரை, 8,000 புலம்பெயர்ந்தோரில் சுமார் 2,000 பேரை ஆண்டுதோறும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி மாகாண சிறைகளுக்கு அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட இந்த புலம்பெயர்ந்தோரில், புகலிடக்கோரிக்கையாளர்களும் அடங்குவார்கள்.

சமீபத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவும், நோவா ஸ்கோஷியாவும், கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன.

குற்றம் சாட்டப்படாவிட்டாலும் சிறையிலடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர்: கனடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயங்கர அனுபவம்... | One Victim S Horrific Experience In Canada

Olivier Plante/Radio-Canada

ஆனாலும், ஒன்ராறியோ, கியூபெக், நியூ ப்ரன்ஸ்விக், ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan ஆகிய மாகாணங்கள் இன்னமும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தத்தை தொடர்கின்றன.

செய்தியின் துவக்கத்தில், தன்னை பல முறை நிர்வாணமாக்கி சோதனை செய்ததாக தெரிவித்த அந்த புலம்பெயர்ந்தோர், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்.

அவரை சமீபத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்தபோது, தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தனது மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.

குற்றம் சாட்டப்படாவிட்டாலும் சிறையிலடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர்: கனடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயங்கர அனுபவம்... | One Victim S Horrific Experience In Canada

Olivier Plante/Radio-Canada

ஒரு சிறிய தனி அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கழிப்பறை கூட கிடையாதாம். தரையில் இருக்கும் ஒரு சிறிய துவாரத்தில்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்கவேண்டுமாம் அவர். அதை தாங்க இயலாமல் பல வாரங்களாக சாப்பிடாமல் இருந்த அவர், விடுவிக்கப்படும்போது எலும்பும் தோலுமாக சாகும் நிலையில் இருந்தார் என்கிறார் அவரது சட்டத்தரணி.

இப்படிப்பட்ட கொடுமைகளை புலம்பெயர்ந்தோர் அனுபவிக்க வழிவகை செய்யும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறார் Amnesty International என்னும் தொண்டு நிறுவனத்தின் கனேடிய பிரிவு எக்சிகியூட்டிவ் இயக்குநரான France-Isabelle Langlois.

அவரது கருத்தை ஆதரிக்கும் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனத்தார் மற்றும் சட்டத்தரணிகள், புலம்பெயர்ந்தோரை காவலில் அடைக்கும் நடைமுறையையே மொத்தத்தில் ஒழித்துக்கட்டவேண்டும் என்கிறார்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US