எப்பேர்ப்பட்ட சளியையும் கரைத்தெடுக்கும் தேன் ! இந்தவொரு பொருளுடன் சேர்த்தாலே போதும்!
பொதுவாக குளிர்காலம் வந்து விட்டாலே சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களின் பரவல் அதிகமாக இருக்கும். சிலருக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும்.
எனவே அதற்கு அடிக்கடி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவது உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே சின்ன சின்ன சலதோஷ பிரச்சினைகளுக்கு சில வீட்டு வைத்திய முறைகளே கை கொடுக்கும்.
அதில் தேன் பழங்காலமாக சளித்தொல்லையை போக்க பயன்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி வெங்காயம் போன்ற இயற்கை பொருட்களில் சளியைபோக்கக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளன.
வெங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அதைக் கொண்டு சிரப் செய்வது உங்க சளியைபோக்க பெருமளவில் உதவி செய்யும்.
அந்தவகையில் இதனை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தயாரிக்கும் முறை
ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது அதை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவற்றை குறைந்த தீயில் இரண்டு மணி நேரம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அந்த சாற்றை வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் சேகரித்து கொள்ளுங்கள். வேண்டுமானால் பச்சை வெங்காயத்தை கூட தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
நன்மைகள்
- வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பைரிடிக் பண்புகள் போன்றவை காணப்படுகிறது. எனவே இது ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளை குறைக்க பயன்படுகிறது.
- வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்கெனில் சிஸ்டைன் சல்பாக்சைடுகள் உள்ளன.அவை இரண்டும் ஆன்டி ஆக்ஸிடன்களாக செயல்படுகின்றன.
- இது செல்களை சேதம் செய்யும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து காக்கிறது. இருதய நோய்கள் மற்றும் சலதோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.