இருமல் மற்றும் சளியிலிருந்து விடுபட வெங்காயத் தண்ணீர் உதவுமா?
பொதுவாக நம்மில் பலர் குளிர்காலம் வந்தாலே, நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் சளி, இருமல் அல்லது தும்மலால் பாதிக்கப்படுவதுண்டு.
இதனை போக்க அடிக்கடி மருந்துகளை தான் வாங்கி போடுவார். உண்மையில் அடிக்கடி மருந்துகளை உபயோகிப்பது தவறாகும்.
இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளியமுறையில் போக்க முடியும்.
அதில் வெங்காயமும் ஒன்றாகும். வெங்காயம் சளி, இருமலை குறைக்க பயன்படுவதாக சொல்லப்படுகின்றது.
வெங்காயத் தண்ணீர்
பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். இது இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகக் கூறப்படும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.
நன்மைகள்
வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது. இது உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் சேர்மங்களும் இதில் உள்ளன.
யார் தவிர்க்க வேண்டும்?
கந்தக ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட வெங்காயத்தை உணவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
குறிப்பு
நீங்கள் எப்பொழுதும் வெங்காயத் தண்ணீரைக் குடிக்கலாம், அது உங்கள் இருமல் மற்றும் சளி பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.