தலைமுடி உதிர்வதை போக்கும் வெங்காயம்! இப்படி பயன்படுத்தி பாருங்களேன்
இன்றைக்கு பல இளம் பெண்கள் முடி உதிர்வு பிரச்சினையால் அவதியுற்று வருகின்றார்கள்.
சுற்றுச்சூழல் மாசுட்டினாலும், வேலை பளுவினால் உண்டாகும் மன அழுத்தம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனை போக்க இன்று எத்தனையோ இரசாயன பொருட்கள் இருந்தாலும் இயற்கை வழிமுறைகளே சிறந்தது.
அந்தவகையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்த வெங்காயம் பெரிதும் துணைபுரிகின்றது.
தற்போது அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை – 1 பெரிய இலை
- கறிவேப்பிலை – சிறிது
- சின்ன வெங்காயம் – 2 (நறுக்கியது)
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
செய்முறை
- முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
- பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும். கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.
குறிப்பு
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.