பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
2023 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்
2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவந்துள்ளது.
இதற்கான இறுதி நாள் ஜூலை 5 எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டிற்கான உயர் தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தேர்வானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |