ஆன்லைனில் அட்டகாசமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி! வைரலாகும் புகைப்படம்
இந்தியாவில் ஒரு ஜோடி ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜீவன் குமார் என்பவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் பெற்றோர் முன்னிலையில் நிச்சயம் நடந்துள்ளது.
இந்நிலையில் நிச்சயம் முடிந்து பணி காரணமாக ஜீவன் குமார் உடனே உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக அவரால் திரும்பி வர முடியவில்லை.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் கட்டாயமாக நடந்தே ஆக வேண்டும் என்று எண்ணி ஏற்கனவே இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமண சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து தங்களது திருமணத்தை குறித்த திகதியில் ஆன்லைன் மூலம் நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் மூலம் செய்து கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று இருவருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இரு வீட்டார் முன்னிலையில் ஆன்லைன் காணொளி காட்சி மூலமாக இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
அதற்கான திருமண சான்றிதழை சார்பதிவாளர் டி.எம்.பிரோஸ் வழங்கினார். ஆன்லைன் மூலமாக திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.