மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- வெளியான அதிரடி முடிவு
9ஆம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளது.
வெளியான முடிவு
சிபிஎஸ்இ, மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்கிறது.
அதாவது 9 ஆம் வகுப்பிற்கு 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து மாணவர்கள் எழுதலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி வகுப்பறையில் எடுத்த குறிப்புகள், நூலகப் புத்தகங்களைக் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் இந்த முறையில் தேர்வு எழுத அறிமுகம் செய்யப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இவ்வாறு செய்வதால் கேள்வியை உணர்ந்து, அதற்கான பதிலை ஏராளமான தகவல்களுக்கு நடுவில் சரியாக கண்டறிந்து எழுதும் ஆற்றலை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |