பாகிஸ்தானை மொத்தமாக அலறவிட்ட இந்தியாவின் பதிலடி பற்றிய 5 புதிய தகவல்கள்

Pakistan Indian Army Operation Sindoor
By Arbin May 25, 2025 03:31 AM GMT
Report

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என அடையாளப்படுத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் 5 புதிய தகவல்கள் கசிந்துள்ளது.

இரண்டு பெண் கர்னல்கள்

வெளியான தகவல்களில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அளவு மற்றும் தீவிரம் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பாகிஸ்தானை மொத்தமாக அலறவிட்ட இந்தியாவின் பதிலடி பற்றிய 5 புதிய தகவல்கள் | Operation Sindoor 5 Fresh Updates

இரண்டு பெண் கர்னல்களின் முதல் போர்ப் பங்களிப்பு: முதல் முறையாக நேரடிப் போரில் களமிறங்கிய இரண்டு பெண் கர்னல்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.

மே 7-10 திகதிகளில் நடந்த தீவிர மோதல்களின் போது பதான்கோட் மற்றும் சூரத்கரில் வான் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய அவர்கள், இராணுவத் தளங்கள், நகரங்கள் மற்றும் மதத் தளங்கள் மீது பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

800 பேர் கொண்ட அவர்களின் பிரிவுகளில் ஒரே பெண் அதிகாரிகளான இரு பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பொறுப்பேற்றனர்.

இந்தியாவுடன் மோதல்... பல கோடிகள் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அண்டை நாடு

இந்தியாவுடன் மோதல்... பல கோடிகள் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அண்டை நாடு

பாகிஸ்தானின் பதிலடி 8 மணி நேரம் மட்டுமே நீடித்தது: 48 மணி நேரத்திற்குள் இந்திய விமானத் தளங்களை அழிப்பதாக சபதம் செய்த பாகிஸ்தான் மே 10 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு ஆபரேஷன் பன்யான் அல்-மர்சூஸைத் தொடங்கியது.

ஆனால், இந்திய விமானப்படையின் நான்கு துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைச் சேதப்படுத்தியதை அடுத்து, அதே நாள் காலை 9:30 மணிக்கு அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது. இதனால், இஸ்லாமாபாத் அவசரமாக அமெரிக்காவை ஒரு போர் நிறுத்தத்திற்கு அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தானை மொத்தமாக அலறவிட்ட இந்தியாவின் பதிலடி பற்றிய 5 புதிய தகவல்கள் | Operation Sindoor 5 Fresh Updates

நூர் கான் விமானப்படைத் தளம்

இந்தியாவின் வலுவான தாக்குதல்கள்: இந்தியப் படைகள் லாகூரில் பாகிஸ்தானின் விலைமதிப்பற்ற சீனாவில் தயாரிக்கப்பட்ட LY-80 வான் பாதுகாப்பு அமைப்பை HARPY kamikaze ட்ரோன் மூலம் அழித்துவிட்டன.

மட்டுமின்றி, கராச்சியில் உள்ள HQ-9 அமைப்பை (சீனாவின் S-300 க்கு சமமான) ஏவுகணைத் தாக்குதலைப் பயன்படுத்தி அழித்தது.

ட்ரம்பின் அச்சுறுத்தல்... ஒரே அறிவிப்பால் ரூ 6 லட்சம் கோடியை இழந்த ஆப்பிள் நிறுவனம்

ட்ரம்பின் அச்சுறுத்தல்... ஒரே அறிவிப்பால் ரூ 6 லட்சம் கோடியை இழந்த ஆப்பிள் நிறுவனம்

பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டிய ரஃபேலும் சுகோயும்: ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ரஃபேல் விமானங்களில் இருந்து SCALP ஏவுகணைகள் மற்றும் Su-30MKI களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளையும் இந்திய விமானப்படை பயன்படுத்தியது.

முதல் தாக்குதலே ராவல்பிண்டின் சக்லாலாவில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில் உள்ள வடக்கு விமானப்படை கட்டளை கட்டுப்பாட்டு மையத்தைத் தகர்த்தது, அதைத் தொடர்ந்து ஜகோபாபாத் மற்றும் போலாரி விமானப்படைத் தளங்களைத் தாக்கி, சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை மொத்தமாக அலற வைத்தது.

பாகிஸ்தானை மொத்தமாக அலறவிட்ட இந்தியாவின் பதிலடி பற்றிய 5 புதிய தகவல்கள் | Operation Sindoor 5 Fresh Updates

பயங்கரவாதிகள் 170 பேர்கள் கொல்லப்பட்டனர்: மே 7 அன்று இந்தியா நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் 170க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இதில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத கோட்டையான பஹாவல்பூரில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.

இந்தியப் பெண் போர் விமானிகளின் தீவிர பங்கேற்புடன் இந்த நடவடிக்கை ஒரு வரலாற்று மைல்கல்லாக மாறியது. மொத்தத்தில், இந்தியத் தாக்குதல்களில் 42 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இந்தியா தரப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US