ஆபரேஷன் சிந்தூர் ஒரு சரியான பதிலடி! பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் - பிரதமர் மோடி
இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை
சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஒரு சரியான பதிலடி
அப்போது அவர், "சிக்கிம் இமயமலையின் மாநிலம்; அது நாட்டின் பெருமை. அந்த மாநிலத்தின் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சரியான பதிலடி. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது.
இந்தியா வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
சிக்கிம் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. இது மாநிலத்திற்கு கிடைத்த ஒரு பாரிய சாதனை ஆகும். சிக்கிம் இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |