சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சிக்கு இலங்கையில் எதிர்ப்பு: சீனாவின் நெருக்கடி தான் காரணமா
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சிக்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு பின்னனியில் சீனா இருக்கிறது என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் எதிர்ப்பு
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வரும் 21 மற்றும் 22 -ம் தேதிகளில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்தார்.
ஆனால், அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது. இதில், அக்கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலர் கஜேந்திரன் செல்வராஜா ஆகியோர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 1987 -ம் ஆண்டு அக்.21, 22 ஆகிய திகதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இந்திய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அதனால், இந்த இந்த நாள்களில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நாள்களாக அனுசரிக்கப்படுகிறது. அதனால், இந்த நாள்களில் இசை நிகழ்ச்சி நடந்தால் இன அழிப்பு பேரினவாதத்துக்கு துணை போனதாக இருக்கும். தமிழ் மக்களை புரிந்து கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை வேறு திகதிக்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |