தொழில்முறை பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பளிக்கும் ஜேர்மனி... யார் யாருக்கு தகுதி?
ஜேர்மனி ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழில்முறை பட்டதாரி ஊழியர்களை பணியமர்த்த முடிவு
வேலைக்கான அனுமதி ஏதுமில்லாமலே ஜேர்மனிக்கு சென்று தனக்கான வேலையைத் தேடிக்கொள்ளலாம்.
உலகளாவிய தொழில்முறை பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளிக்க ஜேர்மனி நிர்வாகம் முன்வந்துள்ளது. வளர்ந்த நாடுகள் பல உலகின் எந்த நாட்டில் இருந்தும் தொழில்முறை பட்டதாரிகளுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன.
அந்த வகையில் ஜேர்மனி தற்போது சர்வதேச அளவில் தொழில்முறை பட்டதாரிகளை ஈர்க்கும் வகையும் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. Chancenkarte என கூறப்படும் வேலை அனுமதி திட்டம். Chancenkarte என்றாலே வாய்ப்பு என்பது தான் பொருள்.
வளர்ந்த நாடுகள் பல ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தால் தற்போது ஜேர்மனி ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழில்முறை பட்டதாரி ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
குறித்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வேலைக்கான அனுமதி ஏதுமில்லாமலே ஒரு தொழில்முறை பட்டதாரி ஜேர்மனிக்கு சென்று தனக்கான வேலையைத் தேடிக்கொள்ளலாம்.
@reuters
ஜேர்மன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கான தேவைக்கு ஏற்ப, வெளிநாட்டு தொழில்முறை பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையை ஒதுக்குகின்றனர்.
இவர்கள் தங்களுக்குரிய வேலையை தேடிக்கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட காலம்வரையில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில், அவர்கள் தங்கள் சொந்த வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றே ஜேர்மன் அரசாங்கம் குறிப்பிடுகிறது.
தகுதி வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் தொழில்முறை தகுதி அல்லது பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கான தொழில்முறை அனுபவம் குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஜேர்மன் மொழியில் சரளமாக பேசுபவராக இருக்க வேண்டும் அல்லது இதற்கு முன்பு ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டும்.
- மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.