ஜெயலலிதா உடலில் சர்க்கரை அதிகம்! வேறு உடல் உபாதைகள்... முதல் முறையாக பேசிய ஓ.பி.எஸ்
ஜெயலலிதா மரணம் தொடர்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ள நிலையில் பல விடயங்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி உயிரிழந்தார். அவர் மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 8 முறையில் இதில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது
ஆனால் இதுநாள் வரையில் ஆஜராகாத அவர் இன்று முதல் முறையாக ஆஜரானார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஓ.பன்னீர் செல்வம் தனது வாக்கு மூலத்தில் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் தனது வாக்கு மூலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரெயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை.
தெரியாது தெரியாது தெரியாது
2016 செப்டம்பர் 22ம் திகதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் எனக்க்கு தெரியாது.
துணை முதல்- அமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது.