அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் கட்டிவைத்த முகமூடி நபர்கள்..சாமர்த்தியமாக பொலிஸை அழைத்த பெண்..திக் திக் சம்பவம்
அமெரிக்காவில் 4 முகமூடி அணிந்த நபர்களால் ஒரு குடும்பத்தினர் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முகமூடி அணிந்த கொள்ளையர்கள்
கலிபோர்னியா மாகாணத்தின் ஆரஞ்சு கவுண்டி பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், நான்கு முகமூடி அணிந்த நபர்களால் சிறைபிடிக்கப்பட்டது.
ஆயுதம் ஏந்திய கும்பல் ஒரு ஆண், வயதான பெண், 14 வயது சிறுவன் மற்றும் 7 வயது சிறுமி ஆகியோரை கட்டி வைத்து, மதிப்புமிக்க பொருட்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டினர்.
ஆனால், குடும்பத்தில் பெண்ணொருவர் அலமாரியில் ஒளிந்துகொண்டு சாமர்த்தியமாக 911ஐ அழைத்துள்ளார்.

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக்கொன்றுவிட்டு சிரிக்கும் பொலிசார்: அமெரிக்காவில் உருவாகியுள்ள சர்ச்சை
சிக்கிய கொள்ளையன்
இதனால் தகவல் கிடைத்ததும் பொலிஸார் உடனடியாக அந்த வீட்டிற்கு விரைந்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களில் டேனி சோமே (29) என்ற நபர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கினார்.
அவர் ஒரு செங்கல் சுவரின் மீது துப்பாக்கியை வீசியத்தைக் கண்டு பொலிஸார் அவரை கைது செய்தனர்.
மேலும், load செய்யப்பட்ட 9mm ரக கைத்துப்பாக்கியை அவரிடம் இருந்து மீட்டனர். அது திருடப்பட்ட துப்பாக்கி என்பது தெரிய வந்தது.
சிறையில் அடைப்பு
அவர் மீது கடத்தல், கொள்ளை, வழிப்பறி, குற்றம் செய்ய சதி செய்தல் மற்றும் திருடப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல் போன்ற வழக்குகள் பதியப்பட்டு, மறுநாள் காலை ஆரஞ்சு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் ஒரு மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், வீட்டில் இருந்து ஏதும் திருடப்பட்டதா அல்லது குடும்பம் ஏன் குறிவைக்கப்பட்டது மற்றும் குடும்பத்தின் தற்போதைய நிலை குறித்து பொலிஸார் விவரங்களை வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |