பிரித்தானியாவில் குளியல் நுரையால் தீயில் கருகிய 4 வயது சிறுவன்! பதறவைக்கும் சம்பவம்
பிரித்தானியாவில், குளியல் நுரையை பயன்படுத்திய 4 வயது சிறுவனின் முகம் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இங்கிலாந்தின் நியூட்டன்-லெ-வில்லோஸ் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.
அந்த வீட்டில், டாட் ஆஸ்கார் பெடார்ட் (Tot Oscar Beddard) எனும் 4 வயது சிறுவன், தனது குளியல் அறையில், 89P Home Bargains எனும் 'குழந்தைகளின் மோல்டப் பாத் நுரை'யை முகத்தில் பயன்படுத்தியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த மெழுகுவர்த்தியில் இருந்து எப்படியோ முகத்தில் இருந்த நுரையில் தீப்பிடித்தது. ஆஸ்கார் சூட்டையும் எரிச்சலையும் தாங்கமுடியாமல் கதறியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு பதறியடுத்து வந்த, சிறுவனின் தந்தை ஜொனாதன் பெடார்ட் (Jonathan Beddard) மற்றும் தாய் நிக்கோலா இருவரும், சிறுவனின் மீது குளிர்ந்த நீரை தெளித்து, பின்னர் அங்கிருந்த துணியால் முகத்தை அனைத்து மகனைக் காப்பாற்றினர். ஆனால், ஆஸ்காரின் முகம் தீயில் கருகியது.
இந்த விபத்தில் ஆஸ்கார் கொடூரமான தீக்காயங்களுடன் ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்றார்.
மருத்துவர்கள் முதலில் எதிர்பார்த்ததை விட ஆஸ்காரின் தீக்காயங்கள் சிறப்பாக குணமாகிவிட்டன, அதாவது குடும்பம் முதலில் அஞ்சியதால் அவருக்கு தோல் ஒட்டுதல் தேவையில்லை.
விசாரணையில், ஜொனாதன் 89P Home Bargains-ன் எர்லஸ்டவுன் கிளையில் இருந்து அந்த குளியல் நுரை தயாரிப்பை வாங்கியதாகக் கூறுனார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.