இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும்- மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது..,
நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத்தவறியது எனக்கு தோல்வியாகப்படுகிறது. அப்படி வந்திருந்தேன் என்றால், இன்று நான் நின்று பேசிக்கொண்டு இருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.
நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.
காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்குப் பிடிக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும்.
மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |