மன்னர் சார்லஸால் வெளியேறிய அரண்மனையின் முக்கிய அதிகாரி: கோபத்தில் கொந்தளித்த இளவரசர் வில்லியம்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle Prince William King Charles III
By Arbin Oct 08, 2022 04:43 PM GMT
Report

ஹரி- மேகன் தம்பதி கண்டிப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என இளவரசர் வில்லியம் நம்பிக்கை

ராணியாரின் பிள்ளைகளான சார்லஸ், ஆண்ட்ரூ காரணமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ காரணமாக அரண்மனையில் இருந்து வெளியேறிய அதிகாரி தொடர்பில் இளவரசர் வில்லியம் கடும் சீற்றம் கொண்டதாக தகவல் கசிந்துள்ளது.

குறித்த நபர் அரண்மனை பொறுப்பில் நீடித்திருந்தால், ஹரி- மேகன் தம்பதி கண்டிப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என இளவரசர் வில்லியம் நம்புவதாகவும் தெரியவந்துள்ளது.

மன்னர் சார்லஸால் வெளியேறிய அரண்மனையின் முக்கிய அதிகாரி: கோபத்தில் கொந்தளித்த இளவரசர் வில்லியம் | Ousting Palace Insider Prince William Furious

@getty

முன்னாள் பிரித்தானிய ராணுவ அதிகாரியும் ராணியாருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே காதாகவே செயல்பட்டவருமான Sir Christopher Geidt என்பவர் தொடர்பிலே இளவரசர் வில்லியம் சீற்றம் கொண்டுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட 15 ஆண்டுகாலம் அவர் பணியாற்றியுள்ளார். ராணியாரின் பிள்ளைகளான சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ காரணமாக 2017ல் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

Sir Christopher Geidt வெளியேறியதால் மிகவும் பாதிக்கப்பட்டது இளவரசர் வில்லியம் என்றே கூறப்படுகிறது. இதனால் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரிடமும், இந்த விவகாரம் தொடர்பில் இளவரசர் வில்லியம் கோபத்துடன் நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

மன்னர் சார்லஸால் வெளியேறிய அரண்மனையின் முக்கிய அதிகாரி: கோபத்தில் கொந்தளித்த இளவரசர் வில்லியம் | Ousting Palace Insider Prince William Furious

@getty

மேலும், Sir Christopher Geidt வெளியேறிய பின்னர், ராணியாருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்ததாகவும், அது சரிசெய்ய முடியாதபடி சேதமடைந்ததாகவும், இதனாலையே, ஹரி- மேகன் தம்பதி அரண்மனையை விட்டு வெளியேறும் சூழலும் உருவானதாக கூறப்படுகிறது.

2002ல் பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியில் சேர்ந்த Sir Christopher Geidt மிக விரைவிலேயே ராணியாரின் மிக நெருக்கமான வட்டத்திற்குள் வந்ததாகவும் கூறப்படுக்கிறது. ராணியாரின் மன நிலையை மிகச் சரியாக புரிந்துகொண்டு, குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடுபவர் இந்த Sir Christopher Geidt.

ஆனால் அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸுடன் பல சந்தர்ப்பங்களில் கருத்து மோதலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ராஜகுடும்பத்தில் இருந்து தாம் ஒதுக்கப்படுவதற்கு காரணம் Sir Christopher Geidt என இளவரசர் ஆண்ட்ரூ நம்பியதும், முதன்மை காரணமாக கூறப்படுகிறது,

மன்னர் சார்லஸால் வெளியேறிய அரண்மனையின் முக்கிய அதிகாரி: கோபத்தில் கொந்தளித்த இளவரசர் வில்லியம் | Ousting Palace Insider Prince William Furious

@getty

மேலும், ராணியாரின் மறைவுக்கு பின்னர் செயல்படும் ராஜகுடும்ப வட்டத்தை சுருக்க வேண்டும் என்ற ஆலோசனையை அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸுக்கு ஆலோசனை வழங்கியவரும் Sir Christopher Geidt தான் என்பதால் இளவரசர் ஆண்ட்ரூ கடும் அதிருப்தியில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்த மொத்த காரணங்களால் Sir Christopher Geidt 2017ல் வெளியேற, இளவரசர் வில்லியம் மனமுடைந்து போயுள்ளார். இதனாலையே, தமது கோபத்தை முக்கிய அதிகாரிகளிடம் அவர் கொட்டியதாக கூறப்படுகிறது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US