பிரித்தானியாவில் 1500-க்கும் மேற்பட்ட NHS மற்றும் சுகாதார ஊழியர்கள் பலி! வெளியான அதிரவைக்கு தகவல்: தெரியவந்த காரணம்.
பிரித்தானியாவில் கொரோனா பரவலுடன் 1500-க்கும் மேற்பட்ட NHS ஊழியர்கள், அதாவது சுகாதார மற்றும் சமூகப்பணியாளர்கள் இறந்துள்ளதாக, தொழிலாளர் எம்.பி. வேதனையுடன் கூறியுள்ளார்.
கொரோனா தாக்குதல் பிரித்தானியாவில் ஆரம்பமான போது, மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் தீவிரமாக போராடினர். அப்போது இந்த நோயின் பாதிப்பு குறித்து, அந்தளவிற்கு தெரியாத காரணத்தினால், பாதுகாப்பு உடைகள் அணிவது போன்றவற்றில் அஜாக்கிரதை காரணமாக மருத்துவ ஊழியர்கள் பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதற்கு முக்கிய காரணம, அரசு தான் எனவும், அரசு சரியான பாதுகாப்பு உடைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
More than 1,500 NHS and care workers have died with Covid in heartbreaking toll https://t.co/c3o4CkdmB9
— Diana Johnson DBE 💙😷🌈 (@DianaJohnsonMP) July 14, 2021
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 9-ஆம் திகதி முதல் இந்த ஆண்டு மே 7-ஆம் திகதி வரை மொத்தம் 922 சமூகபாதுகாப்பு தொழிலாளர்கள் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் Hull North- பகுதிக்கு எம்.பியாக இருக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த Dame Diana Johnson கூறியுள்ளார்.
இதே காலக்கட்டத்தில், 639 NHS ஊழியர்கள் மற்றும் இதில் இருக்கும் முன்னணி பணியாளர்கள் 1,561-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக கூறுகிறார். இதை ஒரு தேசிய சோகம் என்று கூறும் அவர், NHS, சமூக பாதுகாப்பு மற்றும் அவசர சேவை ஊழியர்களுக்கான புதிய உடன்படிக்கைக்கு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாதுகாப்பு உடைகள் மற்றும் சோதனை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, இந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்யும்போது, உயிரை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.