பிரித்தானியாவில் 63 ஆண்டுகள் கழித்து திருப்பிக் கொடுக்கப்பட்ட நூலக புத்தகம்!
பிரித்தானியாவில் 63 ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தை தற்போது திருப்பிக் கொடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
Newcastle upon Tyne நகரத்தில் உள்ள சென்ட்ரல் நூலகத்திலிருந்து, 1957-ஆம் ஆண்டு படிக்க எடுத்துச் சென்ற புத்தகத்தை, 63 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் திருப்பி கொடுத்துள்ளார்.
63 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தந்தியின் மூலம் இந்த புத்தகத்தைத் திருப்பி அனுப்பிய நபர், தனது உண்மையான அடையாளங்களையும் மறைத்து அனுப்பியதால் யார் என்று தெரியவில்லை. யார் என்று தெரிந்தால், வீட்டிற்கு பில் அனுப்பிவிடுவார்கள் என்று கவலைப்பட்டிருப்பார்கள் என்று நூலகம் தெரிவித்துள்ளது.
தாமதமாகத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், “Better late than never! Apologies for the late return!" - ஒருபோதும் செய்யாமல் இருப்பதை விடத் தாமதமாகச் செய்வது நல்லது என குறிப்பிட்டுள்ளார். மேலும், தாமதமாக திருப்பிக் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக நூலகத்தில் அதிகபட்சமாக 20 டொலர் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் அப்படி இல்லாமல், தொடர்ந்து அபராதம் விதித்து இருந்தால் மொத்தம் 4,722 டொலர் அபராதம் விதித்து இருக்க வேண்டும் என்று நூலகம் தெரிவித்துள்ளது.
63 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அந்த புத்தகத்தின் பெயர் 'How to Lie with Statistics', இதனை Darrell Huff எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சென்ட்ரல் நூலகம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.