சொந்த தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த அக்கா: நெகிழ வைக்கும் சம்பவம்
அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரி ஒருவர் தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சகோதரியின் செயல்
தற்போதைய நவீன உலகத்தில் பல அறிவியல் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். மனிதர்கள் சாத்தியமற்றவைகளாக நினைக்கும் விடயங்கள் கூட தற்போது சாத்தியமாகி வருகின்றன.
அதையெல்லாம் பார்க்கும் போது சில நேரங்களில் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும். உலகில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சமூக மாற்றங்கள் நடக்கின்றன.
அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள சகோதரி தனது சகோதரனின் மகனைப் பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் சகோதரி தெரிவித்துள்ளார்.
நடந்தது எப்படி?
இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதழில் கூறுகையில், "அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த சப்ரினா (30) தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், ஓரின சேர்க்கையாளாராக இருந்து வரும் நிலையில், பால் என்ற ஆணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சப்ரினா தனது சகோதரரின் குழந்தையை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அதாவது, ஷான் பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். உயிரில் ரீதியாக இந்த குழந்தை ஷான் பெட்ரியின் குழந்தையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |