பிரித்தானிய ராணியின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும்! காலனித்துவத்தை எதிர்க்கும் மாணவர்கள் வாக்களிப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பொது அறையில் இருக்கும் பிரித்தானிய ராணியின் உருவப்படத்தை நீக்கவேண்டும் என மாணவர்கள் வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் ராணி 'காலனித்துவத்தின் சின்னம்' என்பதால் அவரது உருவப்படம் பல்கலைக்கழக பொது அறையில் வைத்திருக்க கூடாது என முதுகலை மாணவர்களால் ஆன மாக்டலென் கல்லூரி பொது அறையின் உறுப்பினர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
அவரது படத்துக்கு பதிலாக ஒரு அழகிய கலைப்படைப்பை அல்லது மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய மற்றும் அவர்கள் பின்பற்றக்கூடிய முக்கிய பெருமக்களின் உருவப்படங்களை வைக்கலாம் பரிந்துரைத்துள்ளனர்.
மாணவர்கள் ராணியின் படத்தை நீக்க வாக்களித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய கல்வித்துறை செயலாளர் Gavin Williamson "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ராணியின் படத்தை அகற்றுவது வெறுமனே அபத்தமானது. அவர் நாட்டின் தலைவராகவும், இங்கிலாந்தின் சிறந்த அடையாளமாகவும் உள்ளார். தனது நீண்ட ஆட்சியின் போது, உலகெங்கிலும் சகிப்புத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் பிரிட்டிஷ் மதிப்புகளை ஊக்குவிக்க அவர் அயராது உழைத்துள்ளார்" என கூறியுள்ளார்.
மாணவர்களின் இந்த முடிவுக்கும் Magdalen கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கல்லூரியின் முதல்வர் கூறியுள்ளார். மேலும், மத்திய பொது அறை என்பது பட்டதாரி மாணவர்களின் அமைப்பு. அவர்கள் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் "சில ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 2013-ல், அவர்கள் தங்கள் பொது அறையை அலங்கரிக்க ராணியின் புகைப்படத்தை வாங்கி, அலங்கரித்தனர்.
ஆனால் இப்போது அவர்கள் சமீபத்தில் அதை நீக்க வேண்டுமென வாக்களித்தனர். இந்த இரண்டு முடிவுகளும் கல்லூரியின் முடிவு அல்ல. அந்த மாணவர் குழுவின் முடிவு" என கூறினார்.