பிரித்தானியாவில் இந்த மாத்திரைகளில் பாரிய பிரச்சினை: உடனடியாக திரும்பப்பெற உத்தரவு
பிரித்தானியாவில் உயர் இரத்த அழுத்தத்திற்காக பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில், உலகின் பயங்கர வெடி மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவற்றை உடனடியாக திரும்பப் பெற சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அத்துடன், அந்த மாத்திரைகளில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனங்களும் இருப்பது தெரியவந்துள்ளதால், மருந்தகங்கள் அவற்றை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளன.
பல மில்லியன் பிரித்தானியர்கள் பயன்படுத்தும் இந்த மாத்திரைகளில் சில, சந்தையில் இரண்டு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதே நேரத்தில், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்து சாப்பிடுவோர் அதை உடனே நிறுத்துவது ஆபத்து என்பதால் உடனடியாக அதை நிறுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் மருத்துவரை அணுகி, தகுந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.