டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி குறித்து பிரதமர் தன்னிடம் என்ன சொன்னார்? போட்டுடைத்த ரமீஸ் ராஜா
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை மாற்றுமாறு தன்னிடம் கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கு பாபர் அசாம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை இரண்டு வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின்ர நேற்று பிரதமர் இல்லத்திற்கு சென்ற பிரதமர் இம்ரான் கானை சந்தித்தனர்.
டி20 உலகக் கோப்பை அணியுடனான சந்திப்பில், வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் நிகழ்வில் சிறப்பாக செயல்படுமாறு அணிக்கு பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை மாற்றுமாறு தன்னிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ரமீஸ் ராஜா டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.