படுதோல்விக்கு பின்.,உடைமாற்று அறையில் என்ன நடந்தது? வெளிப்படுத்திய பாகிஸ்தான் பயிற்சியாளர்
இந்தியாவிடம் தோல்வியடைந்தது பாகிஸ்தான் வீரர்களை காயப்படுத்தியதாக பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார்.
61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
கொழும்பில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியுறும் சமயத்தில், மொஹ்சின் நக்வி போட்டி முடியும் முன்பே மைதானத்தில் இருந்து கிளம்பியது பேசு பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் உடைமாற்று அறையில் என்ன நடந்தது என்பதை பயிற்சியாளர் மைக் ஹெஸன் (Mike Hesson) தெரிவித்துள்ளார்.

நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்
அவர், "தற்போது அங்கு மிகவும் ஏமாற்றமளிக்கும் உடைமாற்று அறை உள்ளது. ஏனென்றால் அது பாகிஸ்தானுக்கு எவ்வளவு அர்த்தம் என்பதை அவர்கள் அறிவார்கள். இது ஒரு பெரிய நிகழ்வு, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.
இதற்கு முன்பு ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்றோம், எனவே நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.
ஆரம்பத்தில் பந்து நிறைய சுழன்று கொண்டிருந்தது என்று நினைக்கிறேன், நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால், கிஷன் விளையாடிய விதம்; அவர் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார் என்று நினைக்கிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |