இந்தியாவை வீழ்த்த... போட்டிக்கு முன்பே கொடியோடு வந்து மைண்ட் கேம் ஆடிய பாகிஸ்தான்?
இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன்பு வார்ம் அப் செய்ய வந்த பாகிஸ்தான் அணியினர் கொடியோடு வந்து பயிற்சி செய்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ரசிகர்களின் பல ஆண்டு கனவு இப்போது நிறைவேறியுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணிக்கு துவக்கத்தில் இருந்தே அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் அணி போட்டி துவங்குவதற்கு முன்பு வார்ம் செய்ய வந்த போது, தங்கள் நாட்டு கொடியுடன் வந்தனர்.
பொதுவாக எந்த ஒரு அணியும் வார் அப் செய்ய வரும் போது, தங்கள் நாட்டு கொடியுடன் வரமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் இப்படி வந்தது, ஒரு யுக்தி என்று கூறப்படுகிறது.
அதாவது மறுபுறம் இந்திய வீரர்கள் வார்ம் அப் செய்து கொண்டிருந்த போது, இவர்கள் தங்கள் நாட்டு கொடியை அங்கே நட்டு, வார்ம் அப் செய்தனர். இதன் மூலம் அவர்கள் இது எங்கள் இடம், என்று சொல்வது போல் செயல்பட்டது.
இதற்கு அப்போதே முன்னணி வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். அதாவது அமெரிக்காவில் ரக் பி ஆட்டங்களில் போது, ஒரு சில அணிகள் இது போன்று மைதானத்தில் தங்கள் நாட்டு கொடியை நட்டு விளையாடுவது வழக்கம், இது ஒரு மைண்ட் கேம்மாம்.
அதாவது இது எங்கள் இடம், எங்கள் கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருக்கும் என்று சொல்வதற்காக அப்படி வைப்பார்களாம். அதைத் தான் பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் செய்துள்ளது, அதே போன்று ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் பாகிஸ்தான் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது