சூர்யகுமார் யாதவுடன் செல்ஃபி எடுத்த பாகிஸ்தான் ரசிகை: வைரலாகும் வீடியோ
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சூர்யகுமார் யாதவுடன் பாகிஸ்தானிய ரசிகை ஒருவர் செல்ஃபி எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ்
துபாயில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறியது.
இந்திய அணியில் இடம்பெறாத சூர்யகுமார் யாதவ், ரசிகர்களுடன் ரசிகராக அமைந்து போட்டியை கண்டுகளித்தார்.
Suryakumar Yadav poses with a Pakistani fan 🇵🇰🇮🇳♥️#INDvsPAK #ChampionsTrophy2025 pic.twitter.com/CUHBhOjWM3
— Ahtasham Riaz (@ahtashamriaz22) February 23, 2025
பாகிஸ்தானிய ரசிகை
அப்போது அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகை ஒருவர், சூர்யகுமாரைப் பார்த்ததும் பரவசமடைந்து அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும் அவர் அருகில் இருந்த முதியவரை சூர்யகுமாருடன் சேர்த்து தனியாக ஒரு புகைப்படமும் எடுத்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் 'இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமை' என குறிப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |