உன்னை சீரழித்து கொலை செய்துவிடுவோம்... பிரித்தானிய பெண்ணை மிரட்டிய பாகிஸ்தானியர்கள்: பொலிசாரின் அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்
பிரித்தானிய பெண் ஒருவரை வன்புணர்ந்து கொலை செய்துவிடுவதாக இரண்டு பேர் மிரட்டியும், அது தொடர்பான புகாரை பொலிசார் அலட்சியம் செய்ததால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லண்டனில் வாழும், சட்டத்தில் பட்டம் பெற்ற பிரித்தானிய குடிமகளான Mayra Zulfiquar (24), தன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, Zahir Jadoon என்னும் நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார் Mayra.
மீண்டும் மீண்டும் பொலிசாருக்கு கோரிக்கை விடுத்தும் பொலிசார் Mayraவின் கோரிக்கையை அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், Saad Butt (28) என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு Mayraவிடம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.
எனவே, Mayraவை வன்புணர முயன்றுள்ளார் Butt. இன்னொரு பக்கம் Butt மற்றும் Zahir இருவருடனுமே Mayra நண்பராக பழகியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், Mayra, கடந்த திங்கட்கிழமை (மே 3) அன்று, தான் தங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு ஆண்கள் Mayra தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்ததாக கருதப்படுகிறது. Mayra தங்களை திருமணம் செய்ய மறுத்ததால், சம்பந்தப்பட்டவர்களால் அவர் கொல்லப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவரை வலை வீசித் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டது யார், தேடப்படுவது யார் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.