நாம் தமிழர் கூட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக-வினர்! கடும் நடவடிக்கை எடுக்க பழனிசாமி வற்புறுத்தல்
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கை, நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினரை தடுக்காமல் பொலிசார் வேடிக்கை பார்த்தது ஜனநாயக படுகொலை.
எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதை ஆளுங்கட்சியினர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
@TimesNow can you look into this ruling party of tamilnadu DMK goons attack ? On a protest ? #ரவுடிதிமுக#DMKRowdism pic.twitter.com/ei7tq16mYL
— தமிழ் (@sadhutamil) December 21, 2021
தற்போதுள்ள விடியா அரசில், தமிழகத்தில் உள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
— AIADMK (@AIADMKOfficial) December 23, 2021
நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக ! @NaamTamilarOrg pic.twitter.com/EywIvbjL9i
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக-வினர் மீதும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவிறிய அங்கிருந்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல் துறை தலைவரை வற்புறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.