ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்: பொலிசார் நடவடிக்கை
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளது.
AP
அந்தக் குழு, தனது சமூக ஊடக சேனல்களில், பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு வாழ்க என்று பதிவிட்டுள்ளது.
பொலிசார் நடவடிக்கை
பெர்லினில் பாலஸ்தீனிய சமூகத்தினர் அதிகம் வாழும் Sonnenallee என்னும் இடத்தில், சுமார் 40 நபர்கள் கூடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்து தடை செய்யப்பட்ட கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களின்போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.
இதற்கிடையில், இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஜேர்மானியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதுடன், குறைந்தது ஒரு ஜேர்மானியராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |