தித்திக்கும் சுவையில் பால்கோவா போளி.., இலகுவாக செய்வது எப்படி?
போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
பொதுவாக இந்த போளியை பருப்பு போளி, தேங்காய் போளி என இரண்டு வகைகளாக செய்வார்கள்.
ஆனால், தற்போது அனைவரும் விரும்பி உண்ணும் பால் கோவா போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- மஞ்சள் தூள்- 1
- சிட்டிகை பால்- 1 லிட்டர்
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- மில்க்மெய்ட்- 3 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
பின் பால் பாதியளவு வந்தபின் அதில் சர்க்கரை, மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருந்தால் பால் கோவா கிடைக்கும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதன்பின் பிணைந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டையாக பிணைந்து அதனுள் பால் கோவாவை வைத்து ஓரங்களை மடிக்கவும்.
இறுதியாக இதனை கைகளால் வட்டமாக தட்டி தோசை தவாவில் போட்டு நெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான பால்கோவா போளி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |