தித்திக்கும் சுவையில் பன்னீர் ஜாமுன்.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்புதான் இந்த பன்னீர் ஜாமுன்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பன்னீர் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 லிட்டர்
- எலுமிச்சை சாறு- 5 ஸ்பூன்
- ரோஸ் எசன்ஸ்- 1 ஸ்பூன்
- சோள மாவு- 1 ஸ்பூன்
- மைதா- 1 ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
- சர்க்கரை- 1½ கப்
- தண்ணீர்- 2 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்ததும் அதில் எலுமிச்சை சேர்த்து பால் திரிந்து வந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு தட்டில் சேர்த்து அதில் ரோஸ் எசன்ஸ், சோள மாவு, மைதா, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து இவ்வனைத்தையும் கைகளால் நன்கு பிணைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துகொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து கரைந்து வந்ததும் அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இறுதியாக உருட்டி வைத்த ஜாமுனை இதில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான பன்னீர் ஜாமுன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |