நாவூறும் சுவையில் பன்னீர் பராத்தா.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பன்னீர் பராத்தா மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பன்னீர் பராத்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- பன்னீர்- 200g
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- சீரக தூள்- 1 ஸ்பூன்
- ஆம்சூர் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவை பிணைந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து பிணைந்து வைத்த மாவை உருண்டையாக பிடித்து அதற்குள் கலந்து வைத்த பன்னீர் கலவையை வைத்து சப்பாத்தி போல் திரட்டவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சூடானதும் அதில் திரட்டிய பராத்தாவை சேர்த்து அதன்மேல் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான பன்னீர் பராத்தா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |