நாவூறும் சுவையில் பன்னீர் பாப்கார்ன்.., எப்படி செய்வது?
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பன்னீர் பாப்கார்னை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பன்னீர் பன்னீர் பாப்கார்ன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்னீர்- 250g
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை- ½
- சோள மாவு- 3 ஸ்பூன்
- பிரட் தூள்- 1 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்த கலந்துகொள்ளவும்.
அடுத்து இந்த கலந்த மசாலாவில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு கப்பில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதனைதொடரந்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
இறுதியாக பன்னீரை சோள மாவு கலவையில் பிரட்டி பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெய் பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் பாப்கார்ன் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |