சிக்ஸர் அடித்து சதம் விளாசியதில் சாதனை: ரிஷாப் பண்ட் அதகளம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் சதம் விளாசியதன் மூலம் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
ரிஷாப் பண்ட் 134 ஓட்டங்கள்
லீட்ஸ் மைதானத்தில் நடந்து டெஸ்டில் இந்திய அணி 471 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட் (Rishabh Pant) 134 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
சாதனைப் பட்டியலில்
99 ஓட்டங்களில் இருந்த பண்ட் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். இதன்மூலம் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர் விளாசி சதத்தை எட்டிய இந்திய வீரர்களில், ரிஷாப் பண்ட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மூன்று முறை சிக்ஸர் அடித்து சதம் விளாசியுள்ளார்.
இதன்மூலம் ரோஹித் ஷர்மாவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 6 முறை சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
ரிஷாப் பண்ட் அடித்த மூன்று சதங்களும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |