நடுவானில் பறந்த பாராசூட்! கயிறு அறுந்து நடுக்கடலில் விழுந்த தம்பதி... திக் திக் வீடியோ
இந்தியாவில் நடுவானில் பறந்த பாராசூட்டின் கயிறு அறுந்ததால் தம்பதி கடலுக்குள் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
குஜராத் மாவட்டத்தை சேர்ந்தவர் சகாத். இவரது மனைவி சர்லா. இந்த தம்பதி விடுமுறை நாட்களில் தங்களது நண்பர்களும் டையூவில் உள்ள நாகோவா கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சுற்றி பார்க்க வரும் மக்களை ஈர்க்கும் விதமாக பாராசைலிங் நடைமுறையில் உள்ளது. இந்த தம்பதியும் பாதுகாப்பு கவசங்களை மேற்கொண்டு பாராசூட்டில் மகிழ்ச்சியாக பறந்தனர்.
இதனையடுத்து ஒரு சில நிமிடத்தில் தம்பதி சென்ற பாராசூட்டின் கயிறு திடீரென அறுந்து நடுக்கடலில் விழுந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
@VisitDiu @DiuTourismUT @DiuDistrict @VisitDNHandDD
— Rahul Dharecha (@RahulDharecha) November 14, 2021
Parasailing Accident,
Safety measures in India,
and they said very rudely that this is not our responsibility. Such things happens. Their response was absolutely pathetic.#safety #diu #fun #diutourism #accident pic.twitter.com/doN4vRNdO8
பாராசைலிங் சேவையை வழங்கிவரும் தனியார் நிறுவனமான பாம்ஸ் அட்வென்ச்சர் கடலினுள் விழுந்த தம்பதியினரை பத்திரமாக மீட்டனர்.
இவர்கள் பாதுகாப்புக்காக ஏற்கனவே லைப் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்ததால் எந்தவித பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.