மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லண்டன் புறப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம்.
ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது!
மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க புறப்பட்ட இந்தியக் குடும்பம்
லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17 ஆம் திகதி, லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் இந்தியாவின் குஜராத்தில் வாழும் அவரது குடும்பத்தினர்.
ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முன்கூட்டியே செல்லலாம் என முடிவு செய்து தாவ்னியின் தந்தை ரஜ்னிகாந்த் பட்டேல், தாய் திவ்யாபென் மற்றும் சித்தி ஹேமாங்கி பென் ஆகியோர் வியாழக்கிழமையே புறப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் பயணித்த ஏர் இந்தியா விமானம்தான் அஹமதாபாதில் விபத்துக்குள்ளானது.
அந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்த விமானம் விழுந்த மருத்துவர்களுக்கான ஹாஸ்டலில் இருந்தவர்கள் என குறைந்தது 251 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
பெற்றோர் தனது பட்டமளிப்பு விழாவுக்கு வருவார்கள் என காத்திருந்த தாவ்னிக்கு, அவர்களுடைய மரணச் செய்திதான் கிடைத்துள்ளது.
இந்த செய்தி, இன்னொரு குடும்பத்துக்கும் துயரத்தை உருவாக்கியுள்ளது. ஆம், தாவ்னியின் சித்தியான ஹேமாங்கியும் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
சோகம் என்னவென்றால், ஹேமாங்கியின் கணவர் எட்டு மாதங்களுக்கு முன்புதான் மரணமடைந்தார். ஆக, ஹேமாங்கியின் மகனான பார்த் பட்டேல், தன் தந்தை இறந்து எட்டு மாதங்களில், இந்த விமான விபத்தால் தன் தாயையும் பிரிந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |