லண்டனில் 60 எலும்புகள் நொறுங்க கொடூரமாக கொல்லப்பட்ட 8 வார குழந்தை! பெற்றோர்களுக்கு சிறை...
லண்டனில் வெறும் 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை 60-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெஞ்சமின் ஓ'ஷியா (Benjamin O'Shea), 26, மற்றும் நவோமி ஜான்சன் (Naomi Johnson), 24, ஆகிய இருவரும் துணை மருத்துவர்கள் (Paramedics ) என கூறப்படுகிறது.
இருவரும், 8 வாரமே ஆன தங்கள் மகள் அமினா-ஃபயேவை (Amina-Faye) கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைக்கு அவர்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதற்காவும், குழந்தை வலியில் துடிதுடித்து சாக அனுமதித்ததற்காகவும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.
இன்னர் லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஓஷியாவுக்கு எட்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஜான்சனுக்கு ஏழு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தத்தில், குழந்தையின் விலா எலும்புகளில் 41 எலும்பு முறிவுகளும், கைகால்களில் 24 எலும்பு முறிவுகளும் இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அது, குழந்தை அமினா-ஃபாயே தொடர்ந்து உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெளிவாக தெரிவதாக மருத்துவர்கள் கூறினர்.
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் திகதி லண்டனின் Southwark பகுதியில் தம்பதியினரின் வீட்டில் குழந்தை இறந்தது.
அன்று காலை, தந்தாள் குழந்தை சுவாசிப்பதை நிறுத்திவிட்டாள் என அவர்களே மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மருத்துவர்கள் வந்து பார்க்கையில், குழந்தையில் வெளித்தோற்றத்தில் எந்தவித காயமும் இல்லை என மருத்துவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜான்சன் மற்றும் ஓ'ஷியா தம்பதியினர் அவர்களுக்கு தெரிந்த மற்றொரு குழந்தையையும் இதேபோல் கொடுமைப்படுத்தியதாக இடைப்பட்ட காலத்தில் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் குழந்தை கொடுமை வழக்குகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி நைஜெல் பீட்டர்ஸ் கியூசி கூறுகையில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தையை துஷ்பிரயோகம் செய்வது அல்லது கொடூரமாக நடந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானது" என்று கூறினார்.