மனைவியை தோழிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்! குழந்தைகளை நரபலி தர எடுத்த முடிவு.. தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் திருமணமான பெண் அதீத கடவுள் நம்பிக்கையால் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள்.
மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும். இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி இந்துமதியின் தோழி சசி என்பவர் அடிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு குழந்தைகள் கண் முன்பாகவே ராமலிங்கமே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அழைக்கும்படி குழந்தைகளிடம் கூறியுள்ளார். நாளாக, நாளாக பெற்ற மகன்கள் என்றும் பாராமல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதாவும் தோழி சசியுடன் சேர்ந்து கொண்டு சிறுவர்களை கொடுமை படுத்த ஆரம்பித்தனர்.
இரண்டு சிறுவர்களுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு வழங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யவைப்பது, உடலில் மிளகாய் பொடிபோட்டு மொட்டை மாடியில் வெயிலில் நிற்கச்சொல்வது, கழிவறையில் குழந்தைகளை படுக்க வைப்பது என கொடுமைபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைகளை நரபலி கொடுத்தால் ராஜயோகம் கிடைக்கும் என்று தன்னிடம் ஒரு ஜோதிடர் கூறியதாகவும், அதன் படி ரஞ்சிதாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் நரபலி கொடுத்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மூட நம்பிக்கை கண்னை மறைக்க சசியின் யோசனைக்கு சற்றும் தாமதிக்காமல் ராமலிங்கமும் ரஞ்சிதாவும் சம்மத்தித்துள்ளனர்.
இதனையடுத்து மகன்கள் இரண்டு பேரையும் நரபலி கொடுப்பது எப்பது குறித்து இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். மகன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களை நரபலி கொடுக்க மூன்பேரும் சேர்ந்து திட்டம் போட்டது ரஞ்சிதாவின் மூத்த மகன் காதில் விழுந்துள்ளது.
பயந்து போன சிறுவன் செய்வது அறியாமல் தனது சகோதரனுடன் புளியம்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளான்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராமலிங்கம் 2 குழந்தைகளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மிரட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரு சிறுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொடுமைபடுத்துவதாகக் கூறி பொலிசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி சசி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாரியப்பன் ஆகிய ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.