இந்திய அணியின் பிரபல வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர காரணம் மகேந்திர சிங் டோனியா?
தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிய மகேந்திர சிங் தோனிக்கு அனைத்து வாய்ப்புகளும் சென்றது தான் காரணம் என பார்த்தீவ் பட்டேல் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் அந்த அணியின் கேப்டனாகவும் பார்த்தீவ் பட்டேல் களமிறங்கி விளையாடினார். அதேபோல தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடினார்.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் விளையாடுவதை பார்த்து பின்னாளில் இந்திய அணிக்கு நிறைய போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடுவார்கள் என்று நினைத்த வேளையில் 2005 ஆம் ஆண்டு டோனி களமிறங்கினார்.
அதற்குப் பின்னர் அனைத்து வாய்ப்புகளும் டோனிக்கு சென்றது. இவர்கள் இருவரை காட்டிலும் தோனி மிக சிறப்பாக விளையாடிய காரணத்தால் அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு சென்றது.
இதுகுறித்து தற்போது பார்த்தீவ் பட்டேல் ஒரு சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். எனக்கு ஆரம்பத்தில் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இனி வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்த வேளையில் டோனியின் வருகை அனைத்தையும் மாற்றி அமைத்தது. அதற்கு பின்னர் நிறைய வாய்ப்புகள் எனக்கு வழங்கப்படவில்லை.
ஒருவேளை எனக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தால் நான் என்னுடைய ஆட்டத்தை நிரூபிக்க அது சரியாக அமைந்து இருக்கும்.
இருப்பினும் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது என்னுடைய தவறு என்றும் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.