பணத்திற்காக மனைவிகளை மாற்றிக்கொள்ளும் வழக்கம்! பொலிசாரை அதிரவைத்த புகார்
கேரளாவில் பணத்திற்காக ஒருவருக்கொருவர் தங்களது மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கேவலம் நடந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் கேரளாவின் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார், அதில் தன்னுடைய கணவர் வேறொரு நபருடன் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்துவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்தது.
அதாவது, 'டெலிகிராம், மெசஞ்சர்' போன்ற செயலிகள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, தங்கள் மனைவியரை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்வது தெரியவந்தது.
இதையடுத்து அதிரடி வேட்டை நடத்தி கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் கேரளாவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட இந்த குழுவில் இருந்ததும், பணத்திற்காக பலர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது, கூடிய விரையில் இதுதொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.