நாவூறும் சுவையில் மொறுமொறு பருப்பு வடை.., எப்படி செய்வது?
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மொறுமொறு பருப்பு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 கப்
- காய்ந்த மிளகாய்- 3
- சோம்பு- 1 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 4 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலை பருப்பை இரண்டு முறை நன்கு கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் ஊறவைத்த கடலை பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதனை ஒரு பத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடை போல் தட்டி போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான பருப்பு வடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |