இலங்கை-இந்தியா இடையே பயணிகள் படகு சேவை ஏப்ரலில் தொடக்கம்!
ஏப்ரல் 29 முதல் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவை தொடங்கப்படுகிறது.
நான்கு மணி நேர பயணம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த முன்மொழியப்பட்ட பயணிகள் போக்குவரத்து திட்டம் இரு நாட்டு குடிமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயணிகள் படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்தப் படகுச் சேவையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல நான்கு மணி நேரம் ஆகும்.
Times
காங்கேசன்துறையில் பயணிகள் முனையம்
“ஏப்ரல் 29-ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை தொடங்கும். ஒவ்வொரு பயணிக்கும் 100 கிலோ பேக்கேஜ் அலவன்ஸ் மிகவும் சலுகை விலையில் அனுமதிக்கப்படும்” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
மேலும், இரு நாடுகளின் பயணிகள் படகு சேவை நடத்துபவர்கள் சேவையை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக காங்கேசன்துறையில் இலங்கை கடற்படையினரால் பயணிகள் முனையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
PTI